மணிலா , ஜூலை 03-
சீனாவுடன் நல்லுறவை கொண்டுள்ள போதிலும், தென் சீனக்கடல் விவகாரத்தில், நாட்டின் இறையாண்மையை தற்காப்பதில் மலேசியா திடமாக உள்ளது.
அந்தக் கடலில் நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும்.
அதன் பொருட்டு நடப்பில் உள்ள அணுகுமுறைகளுக்கு ஏற்ப சீனாவுடன் சுமூகமான முறையில் பேச்சுகள் நடத்தப்படுவதாக வெளியுறவுத் துணையமைச்சர் டத்தோ மொஹமட் ஆலமீன் தெரிவித்தார்.
நாட்டின் இறையாண்மை விவகாரத்தில், விட்டுக் கொடுக்கும் போக்கு ஒருபோதும் கடைப்பிடிக்கப்படாது எனவும் அவர் உறுதிக்கூறினார்.
சீனாவுக்கு கடந்த மாதம் துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி பயணம் மேற்கொண்டிருந்த போது, தென்சீனக்கடலில் அந்த வல்லரசு புரியும் அத்துமீறல்கள் தொடர்பில், மலேசியா கொண்டிருக்கும் நிலைப்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில், கங்கர் உறுப்பினர் சக்ரி ஹாசன்-னின் கேள்விக்கு டத்தோ மொஹமட் ஆலமீன் பதலளித்தார்.