புத்ராஜெயா, ஜூலை 04-
கடந்த ஜுன் முதல் தேதியிலிருந்து 14 ஆம் தேதி வரை ஓப்ஸ் செத்தக் எனும் சோதனை நடவடிக்கையை உள்துறை அமைச்சு மேற்கொண்டதில் ஆபாச நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் பல தரப்பட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பினாங்கு, சிலாங்கூர், ஜோகூர் மற்றும் கெடாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 5 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள ஆபாச விளையாட்டுச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இவையாவும் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும் என்று அது குறிப்பிட்டுள்ளது.