ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு, ஜூலை 04-

அண்டை வீட்டில் அத்துமீறி நுழைந்து 27 வயது பெண்ணை மானபங்கம் புரிந்ததாக தொழிலாளி ஒருவர், கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

52 வயது முகமது ஃபாதிலி முக்தர் என்ற தொழிலாளி கடந்த ஜூன் 29 ஆம் தேதி கோத்தா பாரு , கம்போங் பெங்கலன் குபோர் சலோர் என்ற இடத்தில் எண் இடப்படாத வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தின் கீழ் அந்த தொழிலாளி குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS