காஜாங் , ஜூலை 04-
தனது வீட்டின் பால்கானி – யில் ஆடவர் ஒருவர் நாயை அடித்து சித்தரவதை செய்து வந்ததாக பொலிஸ் புகார் பெற்றுள்ளனர் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்னான் அப்துல் யூசோப் தெரிவித்துள்ளார்.
காஜாங் ,பத்து 9, சேரஸ் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான கானொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக நேற்று பின்னிரவு 12.47 மணியாளவில் போலீஸ் புகார் ஒன்றை பெற்று இருப்பதாக ஏசிபி நஸ்னான் தெரிவித்தார் மேல் நடவடிக்கைக்காக இவ்விவகாரம் கால்நடை இலாகாவில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார் .