கோலாலம்பூர், ஜூலை 04-
புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள KEMAS எனப்படும் சமூக மேம்பாட்டு இலாகாவின் பாலர் பள்ளித்திட்டத்தை மூடுவதற்கு டிஏபி முயற்சி செய்து வருவதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் அராவ் எம்.பி. ஷாஹிதன் காசிம் இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
ஷாஹிதன் காசிம் – மின் இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
ஷாஹிதன் – னின் இந்த கடுமையான குற்றச்சாட்டைத் தொடர்ந்து DAP நாடாளுமன்ற உறுப்பினர்கனான தெரேசா கோக் / ஆ ர் எஸ் என் ரேயர் / மற்றும்சியர்லீனா அப்துல் ரஷீத் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது பெரும் சர்ச்சையாக மாறியதில் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.