கெடா , ஜூலை 11-
கெடா, கூலிம், லாபு பெசார், கம்போங் பாடாங் உபி எனும் பகுதியில், எலி மருந்து கலக்கப்பட்ட, நொறுக்குத் தீணியை உட்கொண்ட இரு சிறார்களில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, 33 வயது தோட்டக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பண்டார் பாரு, லுபுக் பூந்டார்-ரில் கைது செய்யப்பட்ட அவ்வாடவரை, இன்று தொடங்கி 6 நாள்களுக்கு விசாரணைக்காக தடுத்துவைக்க, சேஸ்யேன் நீதிமன்ற நீதிபதி மிர்சா மொஹமட் அனுமதியளித்தார்.
அவ்வாடவர் மீது போதைப்பொருள் உள்பட முந்தையக் குற்றப்பதிவுகள் இல்லாதது தொடக்கக்கட்ட விசாரணையில், உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் மோஹட் அஷீஸ்குள் மோஹட் காய்ரி தெரிவித்தார்.