பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் 19 நாடுகளுக்கான அரசுமுறை பயணம் ஜனவரி முதல் மே 2024 வரை RM77.58 பில்லியன் முதலீட்டு மதிப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக கூட்டரசுப் பிரதேச பிரதமர்துறை அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், ஜூலை 11-

நவம்பர் 2022 முதல் மே 2024 வரை 19 நாடுகளுக்கு 31 அரசுமுறைப் பயணத்தில் பிரதமர் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

சவூதி அரேபியா, அவுஸ்திரேலியா, புருனே தருஸ்ஸலாம், ஐக்கிய அரபு அமீரகம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், ஜெர்மனி, கஜகஸ்தான், கம்போடியா, எகிப்து, லாவோஸ், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, துருக்கி, உஸ்பெகிஸ்தான், வியட்நாம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மற்றும் அவரது தூதுக்குழு பயணம் செய்துள்ளதாக அவர் கூறினார்..

பிரதமரின் இந்தப் பயணத்தின் வழி 2023 இல் RM353.6 பில்லியன் மற்றும் ஜனவரி முதல் மே 2024 வரை RM77.58 பில்லியன் முதலீட்டு மதிப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன” என்று பெரிக்காத்தான் நேஷனல் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது ஃபவ்வாஸ் முகமட் ஜான் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

WATCH OUR LATEST NEWS