Racing Festival : 3ம் முறை இந்தியாவில் நடக்கும் Motorsport நிகழ்வு – பிரபல டீமுக்கு ஓனரானார் சவுரவ் கங்குலி!

இந்தியா, ஜூலை 12-

Indian Racing Festival : மூன்றாவது முறையாக இந்தியாவின் 8 நகரங்களில் மோட்டார்ஸ்போர்ட் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்த போட்டிகள் துவங்குகிறது.

இன்று டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், இந்திய ரேசிங் ஃபெஸ்டிவல் நிகழ்வின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி அவர்கள், இந்த இந்திய ரேசிங் ஃபெஸ்டிவல் கலந்துகொள்ளும் கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியின் உரிமையாளராக பொறுப்பேற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் மோட்டர் ஸ்போர்ட் நிகழ்வுகளுக்கான ஒரு நல்ல சுற்றுச்சூழலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் இந்த இந்திய ரேசிங் பெஸ்டிவல் நடத்தப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS