பினாங்கு,ஜூலை 13-
பினாங்கு, பட்டர்வர்த்,லிங்ககரன் லுவர் நெடுஞ்சாலையின் பாகன் அஜாம் ஓய்வுத்தளத்தில் போலீஸ் மேற்கொண்ட சிறப்புச் சோதனையில்,, சாலை குண்டர் நடவடிக்கையில் ஈடுபட்ட 101 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இன்று பின்னிரவு 1:30 மணி தொடங்கி காலை 10 மணி வரை அந்தச் சோதனை நடத்தப்பட்டது.
அதில் இருநூற்று 50 மோட்டார் சைக்கிள்களும், இரு கார்களும் பரிசோதனையிடப்பட்டதாக மாநில போலீஸ் தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார்.
பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், தொடர்ந்து நடந்து வரும் சாலை குண்டர் கும்பலின் நடவடிக்கையை முறியடிக்கும் முயற்சியில் பினாங்கு போலீஸ் படை இறங்கியதாக அவர் கூறினார்.