சமையல் எண்ணெய் பொட்டலங்கள் வாங்க நிபந்தனை விதித்த மளிகைக் கடை

பேராக்,ஜூலை 13-

பேராக், பாரிட் புந்தார், அலோர் பொங்சுவில் உள்ள மளிகைக் கடையில், OPS SAMAR சோதனையின் போது, 164 கிலோகிராம் எடையிலான சமையல் எண்ணெய் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஒரு கிலோ சமையல் எண்ணெய் பொட்டலத்தை வாங்க வேண்டுமெனில், வாடிக்கையாளர்கள் கூடுதல் பொருள்களை வாங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட கடையின் வணிகர் நிபந்தனைகளை விதித்துள்ளார்.

    அது குறித்து பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரை அடுத்து தொடர்புடைய மளிகைக் கடையை பாரிட் புந்தார் கிளை அமலாக்க அதிகாரிகளின் சோதனையிட்டதாக பேராக் மாநில உள்நாட்டு வாணிக வாழ்க்கை செலவின அமைச்சின் இயக்குநர் டத்தோ கமலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.

    WATCH OUR LATEST NEWS