ஷா அலாம், ஜூலை 17-
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் உடல் நலம் குறித்து அவசியம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மக்களவை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எம்.பி.க்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வரும் நவம்பர் 11 ஆம் தேதியாகும்.
அவ்வாறு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள தவறும் எம்,.பி.க்களின் பெயர் விபரங்கள். நாடாளுமன்ற அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் நினைவுறுத்தியுள்ளார்.