வங்கி அதிகாரிக்கு லஞ்சம், வழக்கறிஞர் அலுவலகத்தின் மூன்று நிர்வாகிகள் கைது

மலாக்கா, ஜூலை 17-

வங்கி அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படும் மலாக்கா மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கறிஞர் நிறுவனங்களை நடத்தி வரும் அவற்றின் உரிமையாளர்கள் உட்பட மூவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

அந்த மூவரும் இன்று மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவர்களை 5 முதல் 6 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு SPRM அனுமதி பெற்றுள்ளது.

மலாக்காவில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவருக்கு 12 ஆயிரத்து 72 வெள்ளியை லஞ்சமாக கொடுத்ததாக அந்த மூவரும் சந்தேகிக்கப்படுகின்றனர்.

41 க்கும் 43 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரில் ஒருவர் பெண் ஆவார்

WATCH OUR LATEST NEWS