கோலாலம்பூர், ஜூலை 17-
மலேசியாவை காப்பாற்றுங்கள் 2.0 என்ற பெயரில் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி நாட்டில் மூன்று இடங்களில் நடத்தப்படும் என்று அந்த பேரணி ஏற்பாட்டுக்குழுத் தலைவர் துன் பைசல் இஸ்மாயில் அஜிஸ் இன்று அறிவித்துள்ளார்.
பேராவில் தம்புனிலும்,/ பினாங்கில் பெர்மாத்தாங் பாவிலும்,/ கோலாலம்பூரிலும் /அந்த பேரணி நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவை காப்பாற்றுங்கள் 2.0 என்ற முதலாவது பேரணி வரும் ஜுலை 27 ஆம் தேதி நடத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி பெர்மாத்தாங் பாவ்வில் நடத்தப்படும். மூன்றாவது பேரணி வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசியத் தினத்தன்று கோலாலம்பூர் தலைநகரில் நடத்தப்படும் என்று துன் பைசல் தெரிவித்துள்ளார்.