செட்டியு , ஜூலை 18-
MBV வாகனம் ஒன்று இரண்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவ்வாகனத்தை செலுத்திய மாது உயிரிழந்தார். அவரின் மகன் படுகாயத்திற்கு ஆளாகினார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 12.50 மணியளவில்ஜாலான் கோலா திரெங்கானு – கோத்த பாரு சாலையின் 35.5 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இதில் 36 வயது நிக் நபிலா நிக் அப்துல் கஃபர் என்ற மாது உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர். அவரின் 16 வயது மகன் படுகாயத்திற்கு ஆளாகிய வேளையில் மேலும் மூவர் எவ்வித காயமின்றி உயிர் தப்பியதாக செட்டியு மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஜைன் மாட் ட்ரிஸ் தெரிவித்தார்.