தஞ்சோங் மாலிம், ஜூலை 18-
தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி நூர் ஃபர்ஹானா கார்த்தினி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரின் காதலன் என்று நம்பப்படும் ஒரு போலீஸ்காரருக்கு எதிரான தடுப்புக்காவலை போலீசார் நீட்டிக்கவிருக்கின்றனர்.
பேரா, சிலீம் ரீவர் போலீஸ் நிலையத்தின் பணியாற்றி வந்தரான 26 வயது அந்த போலீஸ்காரின் தடுப்புக்காவல் அடுத்த வாரம் திங்கட்கிழமையுடன் முடிவடையவிருக்கிறது.
இக்கொலை தொடர்பில் நிறைய சாட்சிப்பொருட்களை திரட்ட வேண்டியுள்ளன. விசாரணைக்கு ஏதுவாக அந்நபருரின் தடுப்புக்காவலை நீட்டிப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெறுவர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் தெரிவித்தார்.
சராவாக், மீரியைச் சேர்ந்தவரான 25 வயதுடைய அந்த மாணவியின் உடல், கடந்த திங்கட்கிழமை உலு சிலாங்கூர், உலு பெர்ணம், ஸ்ரீ கிளெடாங் -கில் ஒரு செம்பனைத் தோட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.