மாமன்னரின் முடிசூட்டு விழா

மாட்சிமை தங்கிய மாமன்னரின் முடிசூட்டு விழாவிற்கு
இன்னும் ஒரு நாளே உள்ளது………

மன்னர் உயர்த்தே மலர்தலை உலகம் என்பதற்கு சீரிய எடுத்துக்காட்டாக விளங்கும் மலேசியாவின் 17ஆவது மாமன்னரான சுல்தான் இப்ராஹிம், நாளை மறுநாள் ஜுலை 20 ஆம் தேதி சனிக்கிழமை அரியணையில் அமர்கிறார்.

நமது அரசியல் சட்டம் முடியாட்சியையும், ஜனநாயகத்தையும் இணைக்கும் ஒரு புதுமையான மிகச் சிறந்த ஏற்பாடாகும்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பேரரசரையும், துணைப் பேரரசரையும் தேர்ந்தெடுக்கும் ஒரு ஜனநாயக மரபை நாடு கொண்டுள்ளது.

நமது தேசியக் கோட்பாடான Rukun Negara-வின் முதலாவது கோட்பாடு “இறை நம்பிக்கை”, இரண்டாவது கோட்பாடு “மன்னருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்” ஆகும்.

மாமன்னரின் இந்த மாபெரும் முடிசூட்டு விழாவில் மக்கள் அனைவரும் மாமன்னருக்கு தங்களின் மாறாத விசுவாசத்தை புதுப்பித்துக்கொள்ளும் நன்நாளாகும்.

மலேசிய மாமன்னரின்
மணிமகுடம் வாழ்க……
மலர்ச்சிமிக்க வளர்ச்சியாலே
மலேசிய வாழ்வும் ஓங்க…..

WATCH OUR LATEST NEWS