ஏன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்? விளக்கம் கொடுத்த அஜித் அகர்கர்!

இலங்கை, ஜூலை 22-

ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஏன் சூர்யகுமார் யாதவ் டி20 தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறித்து தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளு இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

இதே போன்று டி20 தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். ஆனால், அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்றிருக்கும் போது ஏன், அவர் கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது. அதோடு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் என்று பலரும் அடுக்கடுகான விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்த நிலையில் தான் ஏன் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படாமல், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இருவரும் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS