உயர் கல்வி சேவை நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி கைது

கோலாலம்பூர், ஜூலை 24-

உயர் கல்வி சேவை நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியான பேராசிரியர் அந்தைஸ்தை கொண்ட முக்கிய அதிகாரி ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான 2 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளியை தனது சொந்த நலனுக்கு பயன்படுத்தி, முறைகேடு புரிந்ததன் காரணமாக அந்த தலைமை செயல்முறை அதிகாரி கைது செய்யப்பட்டதாக SPRM வட்டாரம் தெரிவித்தது.

நேற்று இரவு 7 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள SPRM தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட 60 வயதுடைய அந்த பேராசியரை விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

அந்த பேராசிரியர் இன்று புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான தடுப்புக்காவல் அனுமதியை SPRM பெற்றுள்ளது.

WATCH OUR LATEST NEWS