பினாங்கு,ஜூலை 28-
பூமிபுத்ராக்களின் நிலவுடமை விவகாரத்தில் ஒரு போதும் பினாங்கு அரசாங்கம் தடையாக இருக்காது என பினங்கு மாநில முதல் அமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தில் வாழும் மலாய்காரர்களின் வளர்ச்சிகாக PEMENANG எனப்படும் பினாங்கு மலாய்காரர்களின் சங்கம் கொண்டும் வரும் திட்டங்களை பினாங்கு அரசாங்கம் வரவேற்கின்றது என அவர் தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தில் மலாய்காரர்களின் நிலவுடமை எண்ணிக்கை தொடர்பாக PEMENANG மற்றும் UDA Holdings Berhad கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பாக மாநில அரசு தீர ஆராய்ந்து அதற்கு வழி செய்யும் என முதல் அமைச்சர் கூறினார்.