தலையில் தேங்காய் விழுந்ததால் கோமாவில் இருந்த ஆடவர் சுயநினைவு திரும்பினார்

கோத்தா பாரு, ஜூலை 31-

கிளந்தான், கோத்தா பாரு-வில், கடந்த மார்ச் 10ஆம் தேதி, தலையில் தேங்காய் விழுந்ததால், மண்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டு 3 மாதங்கள் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட அப்துல் லத்தீஃப் இப்ராஹிம் எனும் 34 வயது ஆடவர், சுயநினைவுக்கு திரும்பினார்.

தனது தாயாரின் தோட்டத்தை தூய்மைப்படுத்த சென்ற போது நிகழ்ந்த அச்சம்பவத்தில், காயங்களுக்கு இலக்காகியிருந்த அவ்வாடவருக்கு, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் – USM-மின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவரது தலையில், இடது புறத்திலுள்ள மண்டை ஓடு அகற்றப்பட்ட நிலையில், அவ்வாடவர் தற்போது படுத்த படுக்கையில் உள்ளார்.

குடும்ப தலைவருக்கு ஏற்பட்டுள்ள அக்கதியால், அக்குடும்பம் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS