இரண்டாவது மனைவியை மிரட்டிய லாரி ஓட்டுநர் கைது

மலாக்கா,ஆகஸ்ட் 06-

தனது இரண்டாவது மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து, கொன்று விடப் போவதாக மிரட்டிய 58 வயது லோரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மலாக்கா, புக்கிட் கட்டில்-லில் உள்ள தனது வீட்டில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட 49 வயது மாது போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடந்து அந்த லோரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தனது முதலாவது மனைவியை கேமரன்மலைக்கு அழைத்து செல்லப் போவதாக கூறியதைத் தொடர்ந்து அந்த லோரி ஓட்டுநருக்கும், அவரின் இரண்டாவது மனைவிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த கோபத்திற்கு ஆளான தனது கணவர், தலைமுடியைப்பிடித்து, தன்னை அலங்கோலப்படுத்தியதுடன், வீட்டின் அறையில் தள்ளி பூட்டி விட்டு சென்று விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS