பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இறுதி போட்டி வரை வந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில், கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸை எதிர்கொண்டார். கடைசி வரை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல் வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றார். இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50 கிலோவை விட கூடுதலான உடல் எடை காரணமாக வினேஷ் போகத் இறுதி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.