தேடுதல்  வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது 

சிலாங்கூர் , ஆகஸ்ட் 10-

சிலாங்கூர் , கிள்ளான ஜெயா- வில் சமயப்பள்ளி ஒன்றின்  சுராவ்-அருகில்  கழிப்பறையில்  ஒரு பெண்  தலைமை ஆசிரியரையும் ,ஒரு விற்பனை பணிப்பெண்ணையும்  கத்தியால்  தாக்கிவிட்டு  தலைமறைவாகி  விட்ட  ஆசாமியை  பிடிப்பதற்கு  தீவிர  தேடுதல்  வேட்டையை போலீசார்  தொடங்கியுள்ளனர்.

நேற்று  பிற்பகல் 1 .48  மணியளவில்  நிகழ்ந்த  இச்சம்பவத்தில்  காய முற்ற 52  வயது பெண்  தலைமை ஆசிரியரும் , 26  வயது  பெண்ணும்  ஷா ஆலம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவியல்  சட்டம்  307 பிரிவின்  கீழ்  பதிவு செய்யப்பட்ட  இச்சம்பவம் தொடர்பில்  சம்பந்தப்பட்ட ஆசாமியை  போலீசார்  தேடி  வருவதாக  பெட்டாலிங் ஜெயா மாவட்ட  போலீஸ்  தலைவர் ஏசிபி ஷாருல்னிஜாம் ஜாபர் தெரிவித்தார் .

WATCH OUR LATEST NEWS