பேருந்தில்  அரைப்பட்டு  பெண் மரணம் 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10-

வாகனத்தில்  மோதுவதிலிருந்து தவிர்க்கும் முயற்சியில் வேகக்கட்டுப்பாட்டை  இழந்த  மோட்டார் சைக்கிளோட்டி கீழே  விழுந்த போது, மோட்டார்  சைக்கி ளின்யின் இருக்கையில்  அமர்ந்திருந்த  அவரின் மனைவி  பேருந்தில் அரைப்பட்டு பரிதாபமாக  மாண்டார் .

 இச்சம்பவம்  நேற்று காலை 10.40 மணியளவில் கோம்பாக்-கிற்கு  செல்லும் ஜாலான் லிங்கரன் தெங்கா 2 எனும்  எம்.ஆர்.ஆர் 2 சாலையில்  நிகழ்ந்த  இடத்திலேயே  மாண்டார்  அவரின் 28 வயது  கணவர் சொற்ப காயங்களுக்கு  ஆளானார் .

கணவனும் , மனைவியும்  வேலைக்கு சென்று  கொண்டிருந்த  போது, இச்சம்பவம்  நிகழ்ந்ததாக  அம்பாங் ஜெயா மாவட்ட  போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஆசம் இஸ்மாயில் தெரிவித்தார் .

WATCH OUR LATEST NEWS