கோலாலம்பூர், ஆகஸ்ட் 09-
செய்தி தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மலேசியா கினி-யின் மூன்று நிருபர்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள புகாரினால் போலீஸ் துரையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
அரச மலேசிய போலீஸ் படையில் உயர் பதவி வகித்து வரும் அதிகாரிகள் சிலர் ,பணியிடம் மாற்றப்படலாம் என்றும் , மிகப்பெரிய சீரமைப்பு நடைபெறலாம் என்றும் ,மலேசிய கினி செய்தி வெளியிட்டு இருந்தது.
இதன் தொடர்பில் அந்த செய்தி தள நிறுவனத்தின் மூன்று நிருபர்கள் ,போலீஸ் விசாரணைக்கு ஆளாகி வருகின்றனர் .
ஆருடன் தன்மையில் செய்தி வெளியிடுவது மிகப்பெரிய குற்றமா ? என்று நாட்டில் நனிசிறந்த விருதைப்பெற்றவரான மூத்தப்பத்திரிக்கையாளர் ஜோஹன் ஜாபர் வினவியுள்ளார் .
தங்கள் செய்தியில் ஆருடத்தன்மையில் செய்தி வெளியிடுவது என்பது பத்திரிகைத்துறையில் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நடைமுறையாகும்
அமைச்சரவையில் ஏற்படக் கூடிய மாற்றம் குறித்து தகவல் சாதனங்கள் பல முறை ஆருடத்தன்மையில் செய்தி வெளியிட்டுள்ளன . ஆனால், அந்த செய்தி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து இதுவரையில் கேள்வி எழுதப்படவில்லை .போலீஸ் துறை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன் என்று ஜோஹன் ஜாபர் வினவினார்