கோலாலம்பூர், ஆகஸ்ட் 15-
கோலாலும்பூர் மாநகரின் புதிய ”டத்தோ பண்டார் பொது பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ பாதுகா டாக்டர் மைமுன்னா முகமது ஷெரீப், தலைநகர்வாசிகளின் வாழ்க்கைத் தரத்தை சீரப் படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார் .
நகர வளர்ச்சித் திட்டங்களில் பரந்த அனுபவத்தை கொண்டிருக்கும் டாக்டர் மைமுன்னா, தனது அனுபவத்தை மையக் கருத்தாக கொண்டு கோலாலும்பூர் வளர்ச்சித் திட்டங்களுக்கு பாடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இன்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலாலும்பூர் டத்தோ பண்டார்-ஆக பதவியில் அமர்ந்துள்ள 63 வயது டாக்டர் மைமுன்னா,மரியாதை நிமிர்த்தமாக அலுவலகத்தில் சந்தித்தார் .
கோலாலும்பூர் மாநகரில் முதலாவது பெண் டத்தோ பண்டார்-ஆக பொதுப் பேற்றுள்ள டாக்டர் மைமுன்னா, ஓர் உயர்ந்த அந்தஸ்துக்கு கோலாலும்பூரை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார் .