ஜோகூர்,ஆகஸ்ட் 15-
ஜோகூர், மாசாய் -யைச் சேர்ந்த ஆசிரியை இஸ்திகோமா அஹ்மத் ரோஸி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரின் முன்னாள் காதலன் என்று நம்பப்படும் 37 வயது முன்னாள் ஆசிரியர் , நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவது தொடர்பில் துணை பப்ளிக் பிராசிகியூட்டரின் அடுத்த உத்தரவுக்காக போலீஸ் துறை காத்திருக்கிறது .
மூன்று குழந்தைகளுக்கு தயாரான 33 வயதுடைய அந்த ஆசிரியையின் தலை ,நகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவரின் சிதைந்த உடல் , இவ்வாண்டு ஜனவரி 6 ஆம் தேதி , மலாக்கா, ஜாலான் அலோர் கஜா- தம்பின் சாலையில் ஒரு குப்பைதோம்பில் கண்டு பிடிக்கப்பட்டது .
இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அந்த ஆசிரியையுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தவரான அந்த சந்தேகப்பேர்வழி காட்டிய இடத்தில் அந்தப் பெண்ணின் துண்டிக்கப்பட்ட மேலும் சில உடல் அவசியங்களை போலீசார் மீட்டனர்.
இக்கொலைக்கான காரணத்தை போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர் .