சுங்கை பேட்டனி,ஆகஸ்ட் 16-
கெடா, பெடாங் -கில் நேற்று அதிகாலையில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில் கார் கழுவும் மையத்தின் பணியாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் . ஒரு பாதுகாவலரான மற்றொருவர் , கடும் வெட்டுக் காயங்களுக்கு .ஆளானார் .
20 வயது மதிக்கத்தக்க கார் கழுவும் பணியாளர் , சுங்கை பேட்டனி, சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.மற்றோரு நபரான பாதுகாவர், TENAGA NASIONAL BERHAD கடுமனத்தளத்தில் தாக்கப்பட்டு படுகாயத்திற்கு ஆளானார்.
இவ்விரு சம்பவங்களும் பெடாங்-கில் கடை வீடுகள் வரிசை பின்புறம் 2 .7 கிலோ மீட்டர் தூர வித்தியாசத்தில் நிகழ்ந்துள்ளன என்று கோலா மூட மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்