குளுவாங் ,ஆகஸ்ட் 16-
பழுதடைந்த தனது HONDA HRV கரை , சாலையோரத்தில் நகர்த்தி வைப்பதற்கு அதனை தள்ளி வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர் கொள்கலன் லோரியினால் மோதப்பட்டு பரிதாபமாக மாண்டார் .
இச்சம்பவம் இன்று அதிகாலையில் வடக்கு -தெற்கு நெடுஞ்சாலையில் 53.2 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர் ,குளுவாங் அருகில் நிகழ்ந்தது .
இதில் 48 வயதுடைய அந்த காரோட்டி , சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹரின் முகமது நோ தெரிவித்தார்