கோலாலம்பூர், ஆகஸ்ட் 16-
காசா போர் நெருக்கடியில் காயமுற்ற பாலஸ்தீனர்களின் 40 பேர், சிகிச்சை பெறுவதற்காக இன்று மலேசியா கொண்டு வரப்பட்டனர் .
அரச மலேசியா ஆகாயப்படைக்கு சொந்தமான இரண்டு ஏர்பஸ் விமானங்கள் , எகிப்து , A1 MAZA ஆகாயப்படைத் தளத்திலிருந்து அந்த 40 பாலஸ்தீனர்களையும் கோலாலம்பூருக்கு கொண்டு வந்தன .
அந்த இரண்டு மலேசிய விமானங்களிலும் காயமுற்ற 40 பாலஸ்தீனர்களும் , 80 பேர் கொண்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர் என்று மலேசியாவிற்கான எகிப்து தூதர் ராகை நாசர் தெரிவித்தார் .