மனைவிக்கு  எதிராக  கோலா முயற்சி 

கோலா காங்சார்,ஆகஸ்ட் 16-

கோலாலம்பூரை  சுற்றி  பார்க்க  அழைத்ததாக  கூறி, பெரிய பாதாளத்தில் தனது  மனைவியை  தள்ளி கொலை  முயற்சியில்  ஈடுபட்டதாக  ஆடவர்  ஒருவர்  கோலா காங்சார் செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  இன்று  குற்றஞ்ச்சாட்டப்பட்டார் . 

முகமது அசுவான் அஹ்மத் என்ற 39  வயதுடைய  அந்த நபர் நீதிபதி  ரோஹைதா இஷாக் முன்னிலையில்  நிறுத்தப்பட்டு  குற்றச்சாட்டு  வாசிக்கப்பட்டது.

கடந்த ஜூலை  27 ஆம்  தேதி காலை 5  மணியளவில்  32 வயதுடைய  தனது  மனைவியை  பேரா கெரிக்  அருகில்  கெரிக் -ஜெலி  கிழக்கு  மேற்கு  நெடிஞ்ச்சலையின் 31 .2  ஆவது  கிலோ  மேட்டரில்  இக்குற்றத்தை  புரிந்ததாக  குற்றச்சாட்டில்  தெரிவிக்கப்பட்டது .

WATCH OUR LATEST NEWS