அரசாங்க  ஊழியர்களுக்கு  7  விழுக்காடு  முதல் / 15 விழுக்காடு வரை சம்பள உயர்வு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் அறிவித்தார் 

புத்ராஜெயா,ஆகஸ்ட் 16-

நாடு முழுவதும்  உள்ள 16 லட்சம்  அரசாங்க  ஊழியர்களுக்கு  புதிய  சம்பளத் திட்டத்தின்  கீழ் சம்பள  உயர்வை  பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று  அறிவித்தார் 

அரசு ஊழியர்களுக்கு  அமல்படுத்தப் படவிருக்கும்  புதிய சம்பளத்திட்டத்தின்  கீழ் அவர்களுக்கு 7  விழுக்காடு  முதல் 15 விழுக்காடு  வரை  சம்பள  உயர்வு  வழங்கப்படும்  என்று இன்று புத்ரா  ஜெயாவில் அமனத் பெர்டானா நிகழ்வில்  பிரதமர் அறிவித்தார் .

இதன் மூலம் பொதுச் சேவை  ஊழியர்கள்  13  ஆண்டுகளுக்கு  பிறகு  சம்பள  உயர்வை  பெறவிருக்கின்றனர். இந்த  புதிய  சம்பள  உயர்வில்  அரசு  ஊழியர்களின்  சம்பளம்  15  விழுக்காடு  உயர்த்தப்படவிருக்கிறது .  அதேவேளையில்  அரசு சேவையில்  உயர்  மட்ட  நிர்வாகப்  நிர்வாகப்  பொறுப்பில்  இருக்கின்றவர்களுக்கு  7  விழுக்காடு  சம்பள  உயர்வு  வழங்கப்படுவதாக  பிரதமர்  குறிப்பிட்டார் .

இந்த சம்பள  உயர்வு திட்டம்  இரண்டு  கட்டங்களாக  அமல்படுத்தப்படும் . இவ்வாண்டு  டிசம்பர்  மாதம் முதல் ,  ஒருவகை  சம்பள  உயர்வும் , வரும்  2026 ஆம்  ஆண்டு ஜனவரி  முதல் தேதியிலிருந்து  ஒருவகை  சம்பள  உயர்வும்  அமல்படுத்தப்படும்  என்று பிரதமர் அறிவித்தார் .

WATCH OUR LATEST NEWS