கோலாலம்பூர், ஆகஸ்ட் 16-
கடந்த வாரம் கோலாலம்பூரில் நடைபெற்ற அமச்சூர் கால்பந்து போட்டியின் பொது , ஆட்டக்காரர்கள் மத்தியில் எழுந்த மோதலில் கேரம்பித் கத்தியை உயர்த்திப்பிடித்த ஆட்டக்காரர் ஒருவருக்கு கோலாலும்பூர் , சேஷன்ஸ் நீதிமன்றம் இன்று 14 நாட்கள் சிறைத்தண்டனை விதித்தது.
ஒரு நாசி லெமாக் வியாபாரியான 22 வயது முஹம்மது நூர் இமான் ஷாஃபி என்ற ஆட்டக்காரர் , தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி நோரினா ஜைனோல் அபிடின் மேற்கண்ட தண்டனையை விதித்தார்.
மற்ற ஆட்டக்காரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்மையிலான அந்த ஆயுதத்தை உயர்த்திப்பிடித்த சம்பவம் , கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தேச மேளவாடி கால்பந்து அரங்கில் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது