குவா முசாங் , ஆகஸ்ட் 16-
கிளந்தன் , குவா முசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நீங்கிரி சடடமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது .
இந்த இடைத்தேர்தலில் பதிவுபெற்ற வாக்காளர்களில் 60 விழுக்காட்டினர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்தார் .
தேர்தல் முடிவு , நாளை இரவு 9 .00 மணிக்கு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஓரங் அஸ்லி கிராமப் பகுதிகளில் வாக்களிப்பு நேரம் பிற்பகல் 2 மற்றும் 3 மணிக்குள் முடிவுறும் . வாக்குப்பெட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்வதற்கு இரண்டு ஹெலிகாப்ட்டார்கள் பயன்படுத்தபட விருப்பதாக அவர் தெரிவித்தார் .