சட்டவிரோத லைசென்ஸ்  வங்க ஆடவர் கைது 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 16-

வாகனமோட்டும்  சோதனையில்  அமராமல் , வெறும் பணம் செலுத்தி  பெறப்பட்ட  லைசென்ஸ்  வைத்திருந்த  வங்களாதேசி ஒருவர்  பட்டுள்ளார்.

கிள்ளான் , ஜாலான் பண்டமாறனில்  கடந்த  செவ்வாய்க்கிழமை , வாகன  மோட்டும் லைசென்ஸின்றி பிடிபட்ட  தனது  தம்பிக்கு  உதவுவதற்காக வந்த அந்த  வங்களதேச ஆடவர், கடந்த 2022  ஆம்  ஆண்டிலிருந்து  சட்டவிரோத  வாகன  உரிமத்தை  கொண்டிருப்பது  அம்பலமானது .

அதற்கு  முன்னதாக , ஐஸ் லோரி ஒன்றை  செலுத்திய  அந்நிய ஆடவர்  பிடிப்பட்டதைத்  தொடர்ந்து  வாகனமோட்டும்  உரிமம்  இல்லாத  அவர் எவ்வாறு  லோரியை செலுத்த  அனுமதிக்கப்பட்டார்  என்று  ஆராயப்பட்டதாக  சிலாங்கூர்  மாநில சாலை  போக்குவரத்து  இலாகாவின்  இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார் .

சம்பந்தப்பட்ட  தனது  அண்ணனுக்கு  பதிலாக  அந்த ஐஸ் லோரியை  செலுத்தியுள்ளார். தம்பியை  காப்பாற்ற  ஜேபிஜே  அலுவலத்திற்கு  வந்த அந்த வங்காள தேசியின் வாகன  லைசென்ஸை ,அதிகாரிகள்  சோதனையிடத்தப்போது , அது பணம் கட்டி , பெறப்பட்ட சட்டவிரோத  லைசென்ஸ்  என்பது  தெரியவந்துள்ளதாக  அஸ்ரின் போர்ஹான் விளக்கினார் 

WATCH OUR LATEST NEWS