புத்ராஜெயா,ஆகஸ்ட் 16-
அரசாங்க ஊழியர்களாக சேவைத்துறையில் சேர்வதற்கு ஸ்பிம் தேர்வு அல்லது அதற்கு இணையாக குறைந்தபட்ச கல்வித் தகுதி கோரப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
பொதுச்சேவைத்துறையில் இணைவதற்கு அதன் பணியாளர்ளாகிளின் செயல் திறன் , உற்பத்தித்திறன் மற்றும் மேம்படுத்தும் திறன் ஆகியவையே முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார் .
அரசாங்க ஊழியர்களுக்கு 19 ஆவது அமனாட் பெர்டானா நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.