திங்கட்கிழமை  குற்றஞ்சாட்டப்படுவார் 

அலோர் கஜா,ஆகஸ்ட் 16-

ஜோகூர் , மாசாய் -யைச்  சேர்ந்த  33 வயது  ஆசிரியை  இஸ்டிகோமா அஹ்மத் ரோசி  கோரக் கொலை  தொடர்பில்  அவரின் முன்னாள் காதலன்  என்று நம்பப்படும்  ஒரு முன்னாள்  ஆசிரியர்  வரும் திங்கட்கிழமை  மலாக்கா, அலோர் கஜா மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில்  குற்றஞ்சாட்டப்பட விருக்கிறார் .

தலை , காய்-கால்கள்  துண்டிக்கப்பட்ட  நிலையில் அந்த ஆசிரியையின்  சிதைந்த  உடல் இவ்வாண்டு  ஜனவரி  6  ஆம்  தேதி அலோர் கஜா-தம்பின் சாலையில்  புலவு சேப்பங் , கம்போங்  ரீமாவு என்ற  இடத்தில்  குப்பைத்தொட்டியில்  கண்டு  பிடிக்கப்பட்டது .

ஜோகூர் , பசீர்  குடங் , கோட்ட மாசாய் 3  பள்ளியில் பணியாற்றியவரான  அந்த  ஆசிரியை  கடந்த  ஆண்டு  டிசம்பர்  26  ஆம்  தேதி  மர்மமான  முறையில்  காணாமல்  போனார் . அவரை  கொலை செய்ததாக  37  வயது  நபர்  கைது செய்யப்பட்டுள்ளார் .

WATCH OUR LATEST NEWS