புருனே: மக்கள் வரி செலுத்த தேவையில்லை; கல்வி, மருத்துவம் இலவசம் – எந்த நாட்டில் தெரியுமா?

செப்டம்பர் 04-

புருனே சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோதி, செப்டம்பர் 3-ம் தேதி புருனே சென்றார்.

நேற்று புருனேவில் உள்ள உமர் அலி சைபுதீன் மசூதிக்கு சென்ற மோதி, செப்டம்பர் 4-ஆம் தேதி புருனேவின் சுல்தான் ஹசனல் வோல்கியாவை சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் புருனே நாடு பற்றி, 2023-ஆம் ஆண்டு வெளியான இந்த கட்டுரை தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றாக இருந்தாலும் சரி, யுக்ரேனில் நடந்த போராக இருந்தாலும் சரி, அவை ஆசியாவின் இந்த சிறிய நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கவில்லை.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் கடன் பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆனால் புருனேயில் எல்லாம் கட்டுக்குள் உள்ளது.

கொரோனா தொற்றுநோயை சமாளிக்க பல நாடுகள் தங்கள் செலவுகளை அதிகரிக்க வேண்டியிருந்தது. திடீர் பிரச்னை காரணமான செலவுக்கு அவற்றிடம் பட்ஜெட் இல்லை. கோவிட்-19 உலகப் பொருளாதாரத்தின் மீது மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

உலகளவில் விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் இந்த தொற்றுநோய்க்கான செலவுதான்.

ஆனால் இந்த எல்லா சவால்களிலிருந்தும் விலகி, புருனேயில் எந்த பிரச்னையும் இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இந்த நாட்டில் 1.9% கடன் மட்டுமே உள்ளது. இதுவே உலகின் மிகக் குறைந்த கடன் தொகையாகும்.

ஆனால் புருனேயின் பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது என்பது இதன் பொருள் அல்ல.

பல வளரும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது கடன் குறைவாக உள்ளது. ஏனெனில் இந்த நாடுகளில் செல்வம் மற்றும் கடன் இரண்டுமே குறைவாக உள்ளன.

இருப்பினும், புருனேயின் விஷயத்தில் அப்படி இல்லை.

பெட்ரோ ஸ்டேட் மற்றும் அபரிமிதமான செல்வம்

புருனேயில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உலகின் வளமான நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது. இதற்குக் காரணம் இங்குள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு.

“புருனே ஒரு பெட்ரோ நாடு. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90 சதவிகிதம் ஆகும்.”என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸின் பேராசிரியர் உல்ரிக் வால்ஸ் கூறுகிறார்.

2017 ஆம் ஆண்டின் இறுதியில், புருனேயில் ஒரு பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருந்தது. அதேபோல், அங்கு 2.6 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயு இருந்தது என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

தென்கிழக்கு ஆசியாவில் புருனேய் தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த நாடு மலேஷியா மற்றும் இந்தோனேஷியாவுடன் தனது எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.

சுல்தான் ஹசனல் வோல்கியா மற்றும் அவரது அரச குடும்பத்தினரிடம் அபரிமிதமான செல்வம் உள்ளது.

குடிமக்களிடமிருந்து வருமான வரி வசூலிக்காத பொதுநல அரசு

புருனேயின் குடிமக்கள் எந்த வருமான வரியும் செலுத்துவதில்லை. அரசு இலவச கல்வியை அளிக்கிறது. மருத்துவ சேவைகளும் இலவசம்.

நாட்டின் தலைநகரான பந்தர் செரி பகாவனுக்குச் சென்றவர்கள், இது பாதுகாப்பான, சுத்தமான, அமைதியான இடம் என்று கூறுகிறார்கள்.

இது தவிர நாட்டின் மன்னர் அதாவது சுல்தான் தனது குடிமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தேவைப்படுவோருக்கு அவ்வப்போது வீட்டு மனைகள் மற்றும் ஆயத்த வீடுகளையும் வழங்குகிறார்கள்.

மக்கள்தொகை அடிப்படையில் இது ஒரு சிறிய நாடு. இங்கு சுமார் ஐந்து லட்சம் பேர் வசிக்கின்றனர். மேலும் இந்த மக்கள்தொகை நாட்டின் ஒரு சிறிய பகுதியில் குடியேறியுள்ளது.

புருனேயின் கடன் குறைவாக இருப்பதற்குக் காரணம் பெட்ரோலியம் பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் பணம்.

எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் கிடைக்கும் வருமானம் காரணமாக, நாட்டில் பெரும் பண இருப்பு உள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு நாட்டின் ஆட்சியாளர் சிறுசிறு பற்றாக்குறைகளை ஈடுகட்டிக் கொண்டே இருக்கிறார். அவர்கள் கடன் வாங்க வேண்டிய அவசியமே இல்லை.

புருனேயின் பொருளாதாரம் மிகவும் சிறியது. முழு பிராந்தியத்திலும் இதற்கு எந்த செல்வாக்கும் இல்லை. இந்த நாட்டின் முக்கியத்துவம் அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களால் மட்டுமே உள்ளது.

“எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியால், நாட்டின் நடப்பு கணக்கு உபரியில் உள்ளது. அதாவது இந்த நாடு கடன் வாங்கியதை விட மற்ற நாடுகளுக்கு அதிக கடன்களை வழங்கியுள்ளது,” என்று பேராசிரியர் வால்ஸ் கூறுகிறார்,

WATCH OUR LATEST NEWS