குவாந்தன்,செப்டம்பர் 09-
பகாங்,ஜெங்கா 3 இல் ஒரு செம்பனை ஆலை அருகில் இன்று காலை 7 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன் ஐவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்..
மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் Perodua Alza காரில் ஒரு சிறுமியுடன் பயணித்த மாது, பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மரணமுற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.