கோலாலம்பூர், செப்டம்பர் 18-
பினாங்கு மற்றும் பேரா, பாங்கோர் கடல் பகுதிகளில் நேற்று பேரலைகள் ஏற்பட்டு இருப்பது வழக்கத்திற்கு மாறானதாகும் என்று மலேசிய வானிலை ஆய்த்துறையான Met Malaysia தெரிவித்துள்ளது.
நீர்பெருக்கின் காரணமாக பேரலைகள் ஏழுந்துள்ளன. இது வழக்கத்திற்கு மாறானதாகும். நீடித்து வரும் கனத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இது ஏற்பட்டு இருக்கலாம் என்று Met Malaysia இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்தார்.