கொள்ளை முயற்சி, இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்

நிபோங் டெபால் , செப்டம்பர் 27-

பினாங்கு, நிபோங் டெபால், புக்கிட் பஞ்சோர்-ரில் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக நம்பப்படும் இரண்டு நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் சம்பந்தப்பட்ட தொழிற்பேட்டைப் பகுதியில் நிகழ்ந்தது.

அந்த தொழிற்சாலை வீற்றிருக்கும் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியின் போது நிகழ்ந்த மோதலில் அந்த இரு கொள்ளையர்களும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது, இன்று நடத்தவிருக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் இதன் முழுமையான விவரங்களை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS