குளுவாங் , செப்டம்பர் 27-
ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறும் வேளையில் தொகுதி வாக்காளர்கள், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே வாக்களிக்கும்படி தேர்தல் ஆணையமான SPR இன்று அறிவுறுத்தியுள்ளது.
நாளை சனிக்கிழமை நிர்ணயம் இல்லாத வானிலை சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மக்கள் திரண்டு வந்து, முன்கூட்டியே வாக்களிக்கும்படி தொகுதி வாக்காளர்களை SPR செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் கேட்டுக்கொண்டுள்ளார்.