கோலாலம்பூர், அக்டோபர் 15-
இன்று காலையில் அம்பாங், தாமான் மெலாவத்தியிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பில் விரிவான விசாரணை நடத்தும்படி பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி உத்தரவிட்டுள்ளார்.
ஜாலான் இ 6 மற்றும் ஜாலான் G2 ஆகிய சாலைகளின் அருகே இன்று
காலை 10.15 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் நான்கு வீடுகளும் ஒரு வாகனமும் சேதமுற்றன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிருடன் சேதம் அல்லது காயம் ஏற்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி
அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி பொதுப்பணி இலாகாவிற்கு தாம் பணித்துள்ளதாக அலெக்சாண்டர் கூறினார்.