கோலாலம்பூர், அக்டோபர் 15-
கனத்த மழையினால் இருப்புப்பாதைகளில் வெள்ளம் ஏற்பட்டு, அவற்றின் உபகரணங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் LRT கிளானா ஜெயா வழித்தடம் இன்று நிலைக்குத்தியது.
காலை 10 மணிக்கு வங்சா மாஜுவிற்கும் ஸ்ரீ ரம்பைக்கும் இடையில் உள்ள இருப்புப்பாதையில் ஏற்பட்ட இந்த பாதிப்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சீர்படுத்தப்பட்டுள்ளதாக Rapid Rail நிறுவனம் அறிவித்துள்ளது.
LRT ரயில் சேவைக்கு வழக்க நிலைக்கு திரும்பியிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.