கோத்தா கினபாலு, அக்டோபர் 16-
சபா மாநில அமைச்சரவை, ஒற்றுமை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொது சேவை ஊதிய அமைப்பை (SSPA) வரவேற்பதாகவும் அதனை செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் சபா மாநில முதல்வர்டத்தோஸ்ரீ ஹாஜி நூர் தெரிவித்தார்.
இந்த ஊதியச் சீரமைப்பு இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் முதல் கட்டம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும், பின் இரண்டாவது கட்டம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என அவர் மேலும் கூறினார்.
இந்த சீரமைப்பானது 21,228 மாநில பொது சேவையாளர்களை மற்றும் 2,116 இடைகால பணியாளர்களை உள்ளடக்கி மொத்த RM149 மில்லியனுக்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக என அவர் குறிப்பிட்டார்.