கோலாலம்பூர், அக்டோபர் 19-
போலீசாரால் தேடப்பட்டு வந்த மலேசியர் ஒருவர்,தாய்லாந்து, Dannok என்ற இடத்தில் பிடிபட்டுள்ளார் என்று போலீஸ் படைத்தலைவர். டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.
தாய்லாந்தில் போலீசாருக்கு இடையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் எல்லை செயலாக்க ஒத்துழைப்பின் அடிப்படையில் அந்த மலேசியர் பிடிபட்டதாக – ஐ.ஜி.பி குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட கைதி, கிள்ளானைச் சேர்ந்தவர் ஆவார்.