புக்கிட் அமான், அக்டோபர் 23-
நாடு முழுவதும் இவ்வாண்டில் முதல் ஒன்பது மாதங்களில் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 779 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் வரை நிகழ்ந்த விபத்துகளில் மொத்தம் 4,043 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்களில் 20 விழுக்காட்டினர் மாணவர்கள் ஆவார் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப்பிரிவு இயக்குநர் Datuk Seri Mohd Yusri Hassan தெரிவித்தார்.