கட்டுப்பாட்டை இழந்த லோரி, கடையை மோதியது

குவந்தான், நவம்பர் 04-

வேகக்கட்டுப்பாட்டை இழந்த லோரி ஒன்று, கடையை மோதி தள்ளியதில் மூவர் காயமுற்றனர்.

இச்சம்பவம், இன்று மாலை 4 மணியளவில் குவந்தான், ஜலான் கம்பாங்- பத்து 8 னில் நிகழ்ந்தது.

தீயணைப்பு, மீட்புப்படையினர், சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் காயமுற்றவர்கள், பொது மக்களால் காப்பாற்றப்பட்டனர்.

இதில் லோரி ஒட்டுநர் உட்பட மூவர் சொற்ப காயங்களுக்கு ஆளானதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் Ismail Abdul Ghani தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS