புத்ராஜெயா, டிச. 16-
இன்று திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை வரையில் நாட்டில் நான்கு மாநிலங்களில் அடைமழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட் மலேசியா ஆருடம் கூறியுள்ளது.
கிளந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் மோசமான வானிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என்று அது நினைவுறுத்தியுள்ளது.