கனரக வாகனங்களுக்கு எதிராக மிகப்பெரிய சோதனை நடவடிக்கை: ஜேபிஜே தொடங்கவிருக்கிறது

கோலாலம்பூர், டிச. 26-


கடந்த திங்கட்கிழமை வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மலாக்கா, அலோர் காஜாவில் 7 பேர் பலியான ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து நாடு தழுவிய நிலையில் கனரக வாகனங்களுக்கு எதிராக மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே தொடங்கவிருக்கிறது.

டிரெய்லர் லோரியின் சக்கரம் கழன்று விழுந்து, அதன் மீது சுற்றுலா பேருந்து மோதிய கோர விபத்து தொடர்பில் அனைத்து வகையான கனரக வாகனங்களின் நிலை குறித்து சோதனை செய்யப்படும் என்று ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ அர்டி பாட்லி ரம்லி தெரிவித்தார்.

விதிமுறைகளை பின்பற்றாத வர்த்தக வாகனங்களின் போக்குவரத்து நிறுவனம் முடக்கப்படுவது உட்பட பல்வேறு கடும் நடவடிக்கைகைகளை ஜேபிஜே மேற்கொள்ளவிருப்பதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டத்தோ அர்டி பாட்லி தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS